1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (17:04 IST)

’சக்ரா’ படம் ஒடிடியில் வெளியிட தடை கோரி வழக்கு: விஷால் அதிர்ச்சி

விஷால் நடித்த ’சக்ரா’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அதற்கான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் அதிகாரபூர்வமான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது விஷாலின் ’சக்ரா’ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட தடை கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விஷால் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
டிரையண்ட் ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டிருந்த கதையை தான் விஷாலின் ‘சக்ரா’ பட இயக்குனர் ஆனந்தன் எடுத்திருப்பதாகவும் அதனால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பிரச்சனையை சரிசெய்து ஓடிடியில் ரிலீஸ் செய்ய விஷால் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
 
எம்எஸ் ஆனந்தன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. விஷால், ரெஜினா, சாரதா ஸ்ரீநாத், சிருஷ்டி டாங்கே , ரோபோ சங்கர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பதும், யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது