1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 7 ஜனவரி 2022 (15:26 IST)

இந்தியா வரும் பயணிகளுக்கு 7 நாட்கள் வீட்டு தனிமை- மத்திய அரசு

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

இதைத் தடுக்க மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து கொரோனாவைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு ஒரு புதிய உத்தரவிட்டுள்ளது. அதில், இந்தியா வரும் வெளி நாட்டுப் பயணிகளுக்கு இனி 7 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டியது கட்டாயம் எனவும்,  நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும் நாட்களும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தனிமைக் காலம் முடிந்தும் அவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.