1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 5 மே 2020 (20:07 IST)

’இன்ஸ்டா’வில் பின் தொடரும் 3 மில்லியன் பேர்…அனுஷ்கா நன்றி!!

ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. இவரது நடிப்பில் வெளியான அருந்ததி, பாகுபலி போன்ற படங்கள் மக்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றது.

தமிழ், தெலுங்கு சினிமாவில்  முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவரது நடிப்பில் தயாராகியுள்ள சைலன்ஸ் படம் கொரோனா முடிந்து தியேட்டரில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில்,  இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை சுமார் 3 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். அதற்காக அனுஷ்கா நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் குறியுள்ளதாவது :

உங்களின் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவுக்கு எப்போதும் நன்றி! நீங்கள் எப்பொதும் பாதுகாப்புடன் வீட்டில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.