1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 22 ஜூன் 2023 (08:00 IST)

உலகக்கோப்பை கிரிக்கெட் குவாலிஃபையர் போட்டி.. கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற அணி..!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான குவாலிஃபையர் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 
 
அந்த வகையில் நேற்று அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிய நிலையில் ஸ்காட்லாந்து அணி ஐம்பதாவது ஓவரின் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. 
 
முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் அடித்த நிலையில் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ஸ்காட்லாந்து அணி களத்தில் இறங்கியது.
 
இந்த நிலையில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்று இருந்தது. முதல் பந்தில் பௌண்டரி அடித்தாலும் அதன் பின் திணறிய நிலையில் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் பவுண்டரி அடித்ததால் அந்த அணி திரில் வெற்றி பெற்றது.
 
Edited by Siva