வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 3 ஜூலை 2019 (07:17 IST)

உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகள் எவை எவை?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. 11 புள்ளிகளுடன் உள்ள நியூசிலாந்து அணியும், 10 புள்ளிகளுடன் உள்ள இங்கிலாந்து அணியும் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு 3வது அணியாக தகுதி பெற்றுவிடும்
 
இன்றைய போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் 13 புள்ளிகளுடன் மூன்றாவது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அதன்பின்னர் பாகிஸ்தான் அணி வங்கதேசத்துடன் மோதும் போட்டியில் பாகிஸ்தான் வென்றால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். ஒருவேளை வங்கதேசத்திடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தால் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்
 
அதேபோல் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தினால் இங்கிலாந்து அணி 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். இதனையடுத்து வங்கதேசத்தை பாகிஸ்தான் அணி வீழ்த்தினாலும் அந்த அணியால் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெறுவது கடினமே. இவ்வாறு நடந்தால் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்
 
மேலும் இன்றைய போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்து அதன்பின்னர் இந்திய அணியை மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் இலங்கை தோற்கடித்தால் அந்த அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பெறும்
 
மொத்தத்தில் இன்றைய போட்டியே அரையிறுதிக்கு தகுதி பெறும் 3வது மற்றும் 4வது அணியை நிர்ணயம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது