1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (10:50 IST)

விசுவாசம் ரொம்ப முக்கியம் – கோலியின் டிவிட்டால் ஏற்பட்ட குழப்பம்!

இந்திய அணி மற்றும் ஆர் சி பி ஆகிய அணிகளின் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் பகிர்ந்த டிவீட் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து பல சாதனைகளை படைத்து வரும் விராட் கோலிக்கு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது மிகப்பெரிய குறையாக இருந்து வருகிறது. பல முறை இறுதிப்போட்டி வரை வந்தும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு அமீரகத்தில் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரை ஆர் சி பி மற்றும் கோலி ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இதையடுத்து நேற்று கோலி தன் டிவிட்டர் பக்கத்தில் ‘எல்லாவற்றையும் விட விசுவாசம் மிகவும் முக்கியம். ஐபிஎல் தொடரில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளேன்’ என்று பகிர்ந்திருந்தார்.

இதில் விஸ்வாசம் மிகவும் முக்கியம் எனக் கூறியது ஏன் என பலரும் குழம்பியுள்ளனர்.