1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 13 மே 2021 (15:56 IST)

கவனத்தை சிதறவைத்து சீன் போடுவதில் இந்திய அணி கில்லாடி… டிம் பெய்ன் புது கண்டுபிடிப்பு!

ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் களத்துக்கு வெளியே சீன் போடுவதில் இந்திய அணியை வெல்ல யாராலும் முடியாது எனக் கூறியுள்ளார்.

இந்திய அணி கடந்த ஆண்டு இறுதியில் ஆஸியில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனையைப் படைத்தது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலி இல்லாமல் வென்றது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் அந்த தோல்வி குறித்து இப்போது பேசியுள்ள ஆஸி கேப்டன் டிம் பெய்ன் ‘களத்துக்கு வெளியே கவனச்சிதறல்களை உருவாக்கி இந்தியா வென்றது’ எனக் கூறியுள்ளார்.

மேலும் ‘அவர்களிடம் விளையாடும்போது ஒன்றுமேயில்லாத விஷயத்தை பெரிது படுத்தி நமக்கு தேவையில்லாத தொல்லைகளைக் கொடுப்பார்கள். இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு நாங்கள் தோற்றுவிட்டோம். பிரிஸ்பேனில் விளையாட மாட்டோம் என சொன்னார்கள். இதனால் அடுத்த போட்டி எங்கு நடக்க போகிறது என்ற குழப்பம் எங்களுக்கு ஏற்பட்டது. இது போன்ற சீன்களை உருவாக்குவதில் அவர்கள் பெயர் பெற்றவர்கள்.’ என புதிது புதிதாக எதையெதையோ கூறியுள்ளார்.