1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 12 ஏப்ரல் 2018 (15:10 IST)

துப்பாக்கி சுடுதல் போட்டி: வெள்ளி பதக்கம் வென்றார் இந்திய விராங்கனை

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை தேஜாஸ்வினி வெள்ளிப்பதக்கம் வென்றார்

 
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இன்று பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் துப்பாக்கிச்சுடுதல் போட்டிகள் நடந்தது. இதில்  இந்திய வீராங்கனை தேஜாஸ்வினி வெள்ளி பதக்கம் வென்றார். 
 
இதன்மூலம் தற்பொழுது வரை இந்தியா 12 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்கள் பெற்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.