1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2019 (09:24 IST)

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தலைவராகிறார்… சீனிவாசன் மகள் ரூபா !

தமிழ்நாடு கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக சீனிவாசனின் மகன் ரூபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகளை லோதா கமிட்டி சிபாரிசுபடி செய்தது. ஆனால் அந்த உறுப்பினர்கள் போதாது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்  எஸ்.ஏ.போடே, எல்.நாகேஸ்வரராவ்  ‘தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தேர்தலை நடத்திக் கொள்ளலாம். ஆனால் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது’ என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு ரூபா குருநாத் மெய்யப்பன் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவருக்கு எதிராக யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. அதனால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது. 26 ஆம் தேதி நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவுகள் தெரியும்.

ரூபா, பிசிசிஐயின் முன்னாள் தலைவர் சீனிவாசனின் மகளும், சிஎஸ்கே அணி 2 ஆண்டு தடைபெற காரணமாக இருந்த  குருநாத் மெய்யப்பனின் மனைவியும் ஆவார்.