வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 16 நவம்பர் 2018 (22:14 IST)

புரோ கபடி 2018: குஜராத், ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி

2018ஆம் ஆண்டின் புரோ கபடி போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடந்த இரண்டு போட்டிகளில் குஜராத் மற்றும் மேற்குவங்க அணிகளும், ஜெய்ப்பூர் மற்றும் உபி அணிகளும் மோதின.

முதல் ஆட்டமான குஜராத் மற்றும் மேற்குவங்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி 35-23 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது. அதேபோல் ஜெய்ப்பூர் அணி உபி அணியை 45-28 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டிக்கு பின்னர் ஏ பிரிவில் மும்பை, புனே, குஜராத் ஆகிய அணிகளும், பி பிரிவில் பாட்னா, பெங்களூரு மற்றும் தெலுங்கு அணிகளும் முதல் மூன்று இடத்தில் உள்ளது.