வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 11 ஜூன் 2020 (17:11 IST)

ரசிகர்கள் இன்றி ஐபில் போட்டிகள் நடத்த திட்டம் !

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பல கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் லட்சக்கனக்கான உயிரிழப்புகள் முதற்கொண்டு பல்வேறு நாடுகள் பொருளாதார இழப்புகளை சந்தித்துள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இதனால் இந்த  வருடமும் மார்ச் 29 ஆம் தேதி  தொடங்கி மே மாதம் வரை நடபெறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இவ்வாண்டு நடைபெறவில்லை.

இத்னால் பெரும் பிசிசிஐ மற்றும் பான்ஸர்சிப்பிற்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

மேலும் ரசிகர்கள் இல்லாமல் முடப்பட்ட மைதானத்தில் ஐபில் போட்டிகளை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  அவர் தெரிவித்தார்.