செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2019 (21:18 IST)

’அவர் உயிரோட இருக்கற வரைக்கும்’ பாகிஸ்தானுல்கு உலகக் கோப்பை இல்லை - அப்துல்ரசாக்

இங்கிலாந்தில் உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து -ஆஸ்திரேலியா - இந்தியா - நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அரை இறுதி போட்டி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமலே வெளியேறியது. இதனால் பாகிஸ்தா நாட்டு கிரிகெட் ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.
 
இந்நிலையில் அந்நாட்டு அணியின் பயிற்சியாளர் உயிரிழந்தால் தான் பாகிஸ்தானுக்கு உலக கோப்பை கிடைக்கும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளது பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 
 
பாகிஸ்தானின் கிரிக்கெட் அணியின் தற்போதைய கோச்சான பாகிஸ்தான் அணி உயிருடன் இருக்கும் வரையில் நம் வீரர்களால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்  முன்னாள் வீரர் அப்துல் ரசாக் கூறியுள்ளார். இது அந்த நாட்டில்  பெரும் சர்ச்சையை -உருவாக்கிவருகிறது.