1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 7 ஆகஸ்ட் 2021 (09:24 IST)

கோல்ஃப் போட்டி மழையால் நிறுத்தம் - பதகத்தை தட்டுவாரா அதிதீ?

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் அதிதி பங்கேற்றுள்ள கோல்ஃப் போட்டி மழையால் நிறுத்தப்பட்டுள்ளது. 

 
டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கு பெறும் கடைசி நாள் இன்று. இருப்பினும் இன்று இந்தியாவின் கோல்ஃப் விளையாட்டில் அதிதி அசோக், மல்யுத்தப் போட்டியில் பஜ்ரங் புனியா, ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஆகியோர் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் அதிதி பங்கேற்றுள்ள கோல்ஃப் போட்டி மழையால் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்திய வீராங்கனை அதிதி அசோக் 3-வது இடத்தில் உள்ளார். டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இந்தியா ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது. 2 வெள்ளிப் பதக்கம் மற்றும் மூன்று வென்கலப் பதக்கங்கள்.