வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (06:23 IST)

சாம் கர்ரன் அபார ஆட்டம், கடைசி ஓவரை தெறிக்க வைத்த நடராஜன்: தொடரை வென்றது இந்தியா

சாம் கர்ரன் அபார ஆட்டம், கடைசி ஓவரை தெறிக்க வைத்த நடராஜன்: தொடரை வென்றது இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் சாம் கர்ரன் அபார ஆட்டம் காரணமாக இங்கிலாந்து அணி இலக்கை நெருங்கிவிட்ட நிலையில், கடைசி ஓவரை தெறிக்க வைக்குமாறு வீசிய நடராஜனால் இந்திய அணி வெற்றி பெற்றது 
 
நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றதை அடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 329 ரன்கள் எடுத்தது. 330 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 14 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது 
 
கடைசி ஓவரை நடராஜன் வீச அந்த ஓவரில் முதல் பந்திலேயே ரன் அவுட் காரணமாக விக்கெட் விழுந்தது. அதன் பிறகு இரண்டாவது பந்தில் ஒரே ஒரு ரன்னும், மூன்றாவது நான்காவது பந்தில் ரன் ஏதும் இல்லாமலும் 5வது பந்தில் ஒரு பவுண்டரி மட்டுமே சாம் கர்ரனால் அடிக்க முடிந்தது
 
இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் நடராஜன் ஒரு முக்கிய கேட்சை நழுவவிட்டாலும் கடைசி ஓவரை சூப்பராக வீசியதன் மூலம் ஹீரோவானார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் சாம் கர்ரனுக்கு ஆட்டநாயகன் விருதும், தொடர் நாயகன் விருது பெயர்ஸ்டோவுக்கும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.