1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 4 பிப்ரவரி 2021 (16:53 IST)

கோலி இப்போது தன்னை நிரூபித்தே ஆகவேண்டும்… இங்கிலாந்து? – நாசர் ஹூசைன் கருத்து!

இந்திய கேப்டன் விராட் கோலி இப்போது தன்னை நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை வெற்றிக்குப் பின்னர் இப்போது தாய் மண்ணில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. முதல் இரண்டு போட்டிகளும் சென்னையில் நடக்க உள்ளன. ஆஸி தொடரில் விடுப்பு எடுத்துக்கொண்ட கோலி மீண்டும் கேப்டன் பதவிக்கு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ‘இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ரஹானேவின் தலைமையில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. அதனால் இப்போது கோலி தனது தலைமையை நிருபித்தே ஆகவேண்டும். அதனால் அவருக்கு அழுத்தம் அதிகமாகியுள்ளது. இது இங்கிலாந்துக்கு பிரச்சனையாக உள்ளது. அதனால் இங்கிலாந்து அணி முதல் போட்டியில் இருந்தே சிறப்பாக விளையாட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.