1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 24 ஜூலை 2017 (19:24 IST)

மகளிர் ஐபிஎல் தொடர்: முன்வைத்த இந்திய அணி கேப்டன்!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இதுவரை இல்லாத அளவுக்கு மக்களின் அன்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. 


 
 
2005 உலக கோப்பை போட்டி தொடரையும் மித்தாலி தலைமையில்தான் இந்திய அணி சந்தித்தது. இறுதிப் போட்டியில் கடைசி 2 ஓவர்களில்தான் இந்திய அணியின் வெற்றி பறிபோனது.
 
இந்நிலையில், அடுத்த கட்டத்துக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் நுழைய வேண்டிய தருணம் வந்து விட்டது. மகளிர் ஐபிஎல் உடனடியாக தேவை என மிதாலி ராஜ் வலியுறுத்தியுள்ளார். 
 
இது குறித்து அவர் கூறியதாவது, இந்திய வீராங்கனைகளுக்கு ஐபிஎக் மிகுந்த உற்சாகத்தையும், நல்ல அனுபவத்தையும் கொடுக்கும். இளம் வீராங்கனைகள் பதட்டமாக இருந்தனர். இதுதான் தோல்விக்கு வழி வகுத்து விட்டது. இப்போது ஐபிஎல் போட்டி குறித்து விவாதிக்க தொடங்க வேண்டும். இதுதான் மகளிருக்கான ஐபிஎல் தொடங்க சரியான நேரம் என்று தெரிவித்தார்.