1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 14 ஏப்ரல் 2018 (22:43 IST)

ஐதராபாத் அணிக்கு 139 ரன்கள் இலக்கு கொடுத்த கொல்கத்தா

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 10வது போட்டி கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதரபாத் பந்துவீச முடிவு செய்ததால்  முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது.
 
இந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 138  ரன்கள் எடுத்தது. லின் 49 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 29 ரன்களும் எடுத்துள்ளனர்.
 
இந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் வெற்றி பெற 139 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது ஐதராபாத் அணி