1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 15 டிசம்பர் 2020 (16:44 IST)

அந்த வீரருக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தருகிறாரா கோலி?

இந்திய அணியில் வாஷிங்க்டன் சுந்தருக்கு அதிக முக்கியத்துவம் கேப்டன் கோலியால் அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணியில் இப்போது தமிழக வீரர்களின் தாக்கம் அதிகம் உள்ளது. தற்போதைய இந்திய அணியில் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி மற்றும் நடராஜன் ஆகியோர் மூன்று வடிவிலான போட்டிகளிலும் இடம்பெற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இப்போது டெஸ்ட் தொடரில் அவர் இடம்பெறவில்லை என்றாலும் ஆஸ்திரேலியாவிலேயே தங்க வைத்துள்ளாராம் கோலி. அணி வீரர்களுக்கு பந்திவீசி பயிற்சி மேற்கொள்ள  அவரை உபயோகிக்க உள்ளாராம் கோலி. மேலும் டி 20 கிரிக்கெட் போட்டிகளில் நிலையான இடம்பெற்றுள்ள அவரை டெஸ்ட் போட்டிகளுக்கும் ஏற்றவாறு மாற்றவே கோலி இந்த முடிவை செய்துள்ளாராம். எல்லாத்துக்கும் காரணம் கோலியின் ஆர் சி பி அணியில் விளையாடியதுதான் என சொல்லப்படுகிறது.