வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 15 டிசம்பர் 2020 (14:20 IST)

இன்னும் 2 லட்சம் பேரை கொரோனா காவு வாங்கும்: பில்கேட்ஸ்!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு கொரோனா தாக்கம் இருக்கும் என தெரிவித்துள்ளார். 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 7.31 கோடியாக அதிகரித்துள்ளது. 
 
இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு கொரோனா தாக்கம், மிக மோசமாக இருக்கும். மேலும் 2 லட்சம்பேர் கொரோனாவுக்கு பலியாவார்கள் என்று கணித்துள்ளார். 
 
ஆகவே, முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால், பெருமளவு உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.