1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 20 அக்டோபர் 2020 (22:20 IST)

ஐபிஎல்-2020; தவான் மீண்டும் சதம்…பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் இலக்கு…

ஐபிஎல் -2020 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரசிகர்களின் எதிர்ப்பார்புக்கு மேலாக ஒவ்வொரு போட்டியும் நடைபெற்று வருகிறது.

இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணி மோதி வருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இன்று டெல்லிக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெறும் போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் தவான்  மீண்டும் சதம் அடித்தார்.

இந்நிலையில்  டெல்லி அணியினர்  20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து, பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளனர்.