செவ்வாய், 2 ஜூலை 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (11:02 IST)

சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டி: ருத்ராஜ் தலைமையிலான அணி அறிவிப்பு..!

ruthraj
சீனாவில் 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற இருக்கும் நிலையில் அதில்  கலந்து கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.  

செப்டம்பர் 19ஆம் தேதி முதல்  அக்டோபர் 7ஆம் தேதி வரை சீனாவில்  19வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியாகியுள்ளது. 
 
ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் முழு விபரங்கள் பின் வருமாறு:
 
ருத்ராஜ் (கேப்டன்), ஜிதேஷ் வர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னாய், ஆவேஷ் கான், அர்ஷ்திப் சிங், முகேஷ் குமார், ஷிவம் துபே, ப்ரப் சிம்ரன், ஆகாஷ் தீப்
 
Edited by Siva