வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 27 பிப்ரவரி 2019 (16:27 IST)

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் சாதனை...

மனு பாகர், சவுராப் சௌத்ரி ஆகிய இருவரும் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ஐ.எஸ்.எஸ்.எஃப் உலக துப்பாக்கி சுடுதல் நாட்டின் தலைநகரான டெல்லியில் நடைபெற்ரு வருகிறது. இதில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் ரேன்சிங் ஜியாங் மற்றும் பவன் சாங் என்ற சீனாவைச் சேர்ந்தவர்கள் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர்.
 
கொரிய குடியரசு நாட்டி விளையாட்டு வீரர்களான மிய்ஜுங் கிம், மற்றும்  டேஹன் பார்க் ஆகியோர் வெங்கல பதக்கம் வென்றது.
இதில் மனு மற்றும் சவுரப்,ஆகிய இருவரும் சேர்ந்து 483.4 புள்ளிகள் பெற்றனர். மேலும் இவர்கள் இணை ஜோடி சேர்ந்து  உலகில் ஒருஇணை அதிகபட்ச புள்ளிகள் பெற்று  உலக ஜூனியர் துப்பக்கி சுடுதலில் மொத்தம்  778 புள்ளிகள் பெற்றூ சாதனை  படைத்துள்ளனர்.
மற்றொரு இந்திய இணையான ஹீனா சிந்து மற்றும் அபிஷேக் வர்மா ஆகிய இருவரும்  இறுதி போட்டியில் தகுதி பெற தவறிவிட்டனர்.அவர்களுடைய மொத்தம் புள்ளிகள் 770 ஆகும்.