1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 23 பிப்ரவரி 2022 (18:44 IST)

சர்வதேச குத்துசண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் அசத்தல்!

bulgaria
பல்கேரியா நாட்டில் கடந்த சில நாட்களாக சர்வதேச குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் அதில் இந்திய வீராங்கனைகளும் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் நடந்து வரும் இந்த போட்டியில் இந்திய வீராங்கனைகள் நித்து மற்றும் அனாமிகா ஆகிய இருவரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதனையடுத்து இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.