1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (16:58 IST)

வெளிநாட்டில் முதல்முறையாக செஞ்சுரி அடித்த இந்திய அணி

வெளிநாட்டில் முதல்முறையாக செஞ்சுரி அடித்த இந்திய அணி
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சதமடித்த நிகழ்வு இன்று நடந்துள்ளது. 
 
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது என்பதும் தொடக்க ஆட்டக்காரர்களான கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதில் இந்திய அணி இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் 100 ரன்களை தாண்டி அடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆசிய நாடுகளுக்கு வெளியே நடைபெற்ற போட்டிகளில் முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் 100 ரன்களுக்கு மேல் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதற்கு முன்னர் ரோகித் சர்மா மற்றும் கில் 62 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்கள் எடுத்த அதிகபட்ச ரன்கள் ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது