1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 2 நவம்பர் 2023 (20:40 IST)

55 ரன்களில் ஆல்-அவுட் ஆன இலங்கை.. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்..!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 357 ரன்கள் எடுத்த நிலையில் வெறும் 55 ரன்கள் ஆல் அவுட் ஆகி மிக மோசமான தோல்வியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில்  பந்து வீச முடிவு செய்த நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிக அபாரமாக விளையாடினர். குறிப்பாக விராட் கோலி, சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூவரும் சதத்தை நெருங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இந்திய அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 358 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறி கொடுத்தது. இதனை அடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்ததால் வெறும் 55 ரன்கள் ஆல் அவுட் ஆனது.

முகமது ஷமி மிக அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் களையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர். இந்திய அணி இன்று 302 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணி புள்ளி பட்டியலில் 14 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது என்பதும் இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva