1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 நவம்பர் 2021 (20:56 IST)

கடைசி நேரத்தில் தீபக் சஹார் அபார பேட்டிங்: 185 இலக்கு கொடுத்த இந்தியா!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தா நகரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது
 
இந்திய அணியில் ரோகித் சர்மா அபார தொடக்கத்தை கொடுத்தார் என்பதும் அவர் அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கடைசி நேரத்தில் பவுண்டிர்கள் மற்றும் சிக்ஸர்களாக அடித்த தீபக் சஹாரின் அதிரடியால் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்துள்ளது
 
இதனை அடுத்து 185 என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய அணி அவ்வாறு வெற்றி பெற்றால் 3-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது