செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 9 டிசம்பர் 2016 (17:48 IST)

முதல் இன்னிங்ஸ்: அணிக்கு வலுசேர்த்த விஜய்-புஜாரா ஜோடி

மும்பையில் நடைப்பெறும் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் குவித்துள்ளது.


 

 
இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4–வது டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் குவித்தது.
 
இந்திய அணி சார்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். புஜாரா, முரளி விஜய் இணைந்து அலுவான நிலையில் உள்ளனர். முரளி விஜய் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.