1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 12 ஜூலை 2020 (08:06 IST)

170 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து முன்னிலை: மே.இ.தீவுகள் வெற்றி பெறுமா?

170 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து முன்னிலை: மே.இ.தீவுகள் வெற்றி பெறுமா?
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த எட்டாம் தேதி ஆரம்பித்த முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தற்போது கிளைமாக்ஸ் கட்டத்துக்கு வந்துள்ளது
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் எடுத்ததால் 114 ரன்கள் முதல் இன்னிங்சில் முன்னிலை வகித்தது என்பது குறிப்பிடப்பட்டது
 
இந்த நிலையில் நேற்று தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணியை விட அந்த அணி 170 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று கடைசி நாள் ஆட்டம் இருக்கும் நிலையில் இங்கிலாந்தின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, மேற்கிந்திய தீவுகள் அணி மிகக்குறைந்த இலக்கை எட்டி, வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்