1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (10:21 IST)

தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவிக்கு டிராவிட் மீண்டும் விண்ணப்பம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவிக்கு ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பித்துள்ளார். 

 
ஆம், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூரில் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக ராகுல் டிராவிட் உள்ளார். இவரின் பதவிக்காலம் தற்போது முடியவுள்ள நிலையில் அப்பதவிக்கு விண்ணப்பிக்க பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
ஆனால் ராகுல் டிராவிட்டை தவிர்த்து மற்ற யாரும் இதற்கு விண்ணப்பிக்கவில்லை. இதனால் விண்ணப்பம் அனுப்புவதற்கான காலக்கெடுவை மேலும் சில நாட்களுக்கு பிசிசிஐ நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.