வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 14 அக்டோபர் 2021 (17:18 IST)

அவுட் ஆனதும் தினேஷ் கார்த்திக் செய்த செயல்… எச்சரித்த நடுவர்கள்!

நேற்றைய போட்டியில் அவுட் ஆனதும் தினேஷ் கார்த்திக் ஆத்திரத்தில் ஸ்டம்ப்பை தட்டிவிட்டு சென்றார்.

நேற்று நடந்த இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணியின் தவான் 36 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 30 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் கே கே ஆர் அணி கடைசி கட்ட பரபரப்பில் 20 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் டக்  அவுட் ஆனார். அப்போது ஆத்திரத்தில் ஸ்டம்புகளை தட்டிவிட்டு சென்றார். இது ஐசிசி விதிகளின்படி தவறு. இதையடுத்து நடுவர்கள் அவரை எச்சரித்தனர். தினேஷ் கார்த்திக்கும் தன்னுடைய தவறை ஒத்துக்கொண்டார். ஆனாலும் அவருக்கு ஏதேனும் தண்டனை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.