1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 அக்டோபர் 2020 (11:13 IST)

ரோஹித் ஷர்மா மேல் நான் கொலவெறியில இருந்தேன் – தினேஷ் கார்த்திக் சொன்ன ரகசியம்!

நிதாஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் பங்களாதேஷ் அணிக்கெதிராக விளையாடிய அதிரடியான ஆட்டம் இன்னும் ரசிகர்களுக்கு மறந்திருக்காது.

2018 ஆம் ஆண்டு ரோஹித் ஷர்மா தலைமையில் நிதாஸ் கோப்பையில் கலந்து கொண்டது இந்திய அணி. அதில் இறுதிப் போட்டியில் வங்கதேச அணியோடு இந்தியா மோதிய நிலையில் கிட்டதட்ட தோல்வியில் இருந்த இந்திய அணியை கடைசி நேரத்தில் இறங்கி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் வெற்றி பெற செய்தார் தினேஷ் கார்த்திக்.

அந்த போட்டியில் அவருக்கு முன்னதாக தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கரை ரோஹித் ஷர்மா இறக்கினார். ஆனால் அவர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது சம்மந்தமாக ரோஹித் ஷர்மா மேல் தான் கொலவெறியில் இருந்ததாக தினேஷ் கார்த்திக் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.