வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 21 மே 2019 (19:26 IST)

தோனிக்கு சமமான ஒரு வீரர் இல்லை - இந்திய அணி பயிற்சியாளர் பெருமிதம்

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை கூட்டிச் சென்ற பெருமை தோனியையே சேரும். ஆனால் எவ்வளவு தூரம் போராடினாலும் அப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இதில் தோனியின் ரசிகர்கள் அழுது தம் ஏமாற்றத்தைப் பதிவு செய்தனர்.இந்நிலையில் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தோனியை புகழ்ந்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் வரும் 30 ஆம் தேதி அணி உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது. கேப்டன்  கோலி தலைமையிலான  இந்திய அணி அங்கு சென்று கோப்பை யை கைப்பற்றும் முனைப்பில் பயிற்சி மேற்கொண்டுள்ளது.
 
இதுகுறித்த செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்த்திரி கூறியதாவது :
 
தோனி, ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் கொண்டவர்.வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் நிச்சயமாக முக்கிய பங்கு வகிப்பார் . தோனிக்குச் சமமாக வேறொரு வீரர் இல்லை என்று புகழாரம் சூட்டினார்.