1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 16 ஏப்ரல் 2022 (14:06 IST)

என்னை மன்னித்து விடுங்கள்… சி எஸ் கே வீரர் வெளியிட்ட கடிதம்!

சி எஸ் கே வீரர் தீபக் சஹார் காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.

காயம் காரணமாக தீபக் சஹார் தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார்  என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் முழங்கால் காயத்தை அடுத்து முதுகிலும் தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகிவிட்டார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியில் அவர் 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது விளையாட முடியாமல் போனது குறித்து தீபக் சஹார் வெளியிட்டுள்ள அறிக்கையில்  “துரதிரிஷ்டவசமாக என்னால் இந்த சீசன் விளையாட முடியாமல் போய்விட்டது. நான் விளையாட விரும்பினேன் ஆனால் நான் கண்டிப்பாக வலுவாக திரும்பி வருவேன். நீங்கள் கொடுத்த ஆதரவுக்கும் அன்பிறகும் உத்வேகத்திற்கும் நன்றி. உங்களின் வாழ்த்துகள் வேண்டும். என்னை மன்னித்துவிடுங்கள்” எனக் கூறியுள்ளார்.