1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (22:06 IST)

13 பேருக்கும் கொரோனா இருக்குது: அறிவிப்பில் திருத்தம் செய்த சிஎஸ்கே நிர்வாகம்

13 பேருக்கும் கொரோனா இருக்குது:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் உள்பட 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாக கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தகவல் வெளி வந்த நிலையில் இன்று மாலை திடீரென 13 பேர்களும் கொரோனாவில் இருந்து மீண்டதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இந்த அறிவிப்பில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள 13 பேர் தவிர மற்றவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் தற்போது சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது முந்தைய அறிக்கையில் திருத்தம் செய்துள்ளது 
 
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பந்துவீச்சாளர் உட்பட 13 பேர்கள் ஐந்தே நாட்களில் எப்படி கொரோனாவில் இருந்து மீண்டார்கள் என்ற சந்தேகத்தை பலரும் கிளம்பிய நிலையில் தற்போது இதுகுறித்து சிஎஸ்கே அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 13 பேர்களும் மேலும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது