1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (10:46 IST)

இத்தாலியில் நடந்த செஸ் போட்டியில் சென்னை சிறுவனுக்கு சாம்பியன் பட்டம்!

இத்தாலியில் நடந்த செஸ் போட்டியில் சென்னை சிறுவனுக்கு சாம்பியன் பட்டம்!
இத்தாலியில் நடைபெற்ற செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த சிறுவன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
 
இத்தாலியில் வெர்கனி கோப்பை ஓபன் செஸ் போட்டி நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த 14 வயது பரத் சுப்பிரமணியம் என்பவர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த தொடரில் மொத்தம் 6.5 தரவரிசை புள்ளிகள் பெற்று 7வது இடத்தைப் பிடித்திருந்த பரத் பாலசுப்பிரமணியம் கிராஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கான 2500 தரவரிசை புள்ளிகளை பெற்று கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார் 
 
சென்னையை சேர்ந்த 14 வயது பரத் சுப்பிரமணியம் இந்தியாவின் 73வது இளம் கிராண்ட் மாஸ்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இத்தாலியில் நடந்த வெர்கனி கோப்பைக்கான செஸ் போட்டியில் பட்டம் வென்ற சென்னை சிறுவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.