வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (18:02 IST)

புரோ கபடி போட்டி: சாம்பியன் பட்டம் வென்றது பெங்கால் அணி

புரோ கபடி போட்டிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் லீக் போட்டிகள், எலிமினேட்டர் போட்டிகள், அரையிறுதி போட்டிகள் ஆகியவை முடிவடைந்து நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது
 
இந்த போட்டியில் டெல்லி மற்றும் பெங்கால் அணிக்ள் மோதியது. ஆரம்பத்திலிருந்தே இரு அணிகளும் சம பலத்துடன் இருந்ததால் இந்த போட்டி யாருக்கு சாதகமாக முடியும் என்பதை யூகிக்க முடியாத அளவில் இருந்தது 
 
முதல் பாதி முடிவின் போதும், இரண்டாம் பாதியின் முடிவிற்கு சில நிமிடங்கள் முன்பு வரைக்கும் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். ஆனால் கடைசி நேரத்தில் திடீரென பெங்கால் வாரியர்ஸ் அணி வீரர்கள் ஆவேசமாக விளையாடி அதிக புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர்.
 
இந்த போட்டியில் பெங்கால் அணி 39 புள்ளிகளும் டெல்லி அணி 34 புள்ளிகளும் பெற்றதை அடுத்து பெங்கால் அணி இந்த ஆண்டின் புரோ கபடி போட்டி சாம்பியன் ஆனது. டெல்லி அணி இரண்டாம் இடத்தை பெற்றது 
 
இதனை அடுத்து சாம்பியன் பட்டம் வென்ற பெங்கால் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாம்பியன் பட்டம் வென்ற பெங்கால் அணி வீரர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்