செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 3 நவம்பர் 2019 (22:44 IST)

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20: இந்தியா அதிர்ச்சி தோல்வி

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் டெல்லியில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அதிர்ச்சி கொடுத்தது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழக்க, நன்றாக ஆடிக்கொண்டிருந்த தவான் 41 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். இதன்பின்னர் ரிஷப் பண்ட் 27 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களும் எடுத்ததை அடுத்து இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 148 ரன்கள் எடுத்தது
 
149 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 154 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணியின் ரஹிம் அதிரடியாக விளையாடி 60 ரன்களும் சர்கார் 39 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து வங்கதேச அணி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது
 
இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி ராஜ்கோட்டில் வரும் 7ஆம் தேதி நடைபெறும்