வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2017 (05:54 IST)

காவிரி பிரச்சனை குறித்து விருது விழாவில் பேசிய அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளரும் தமிழருமான அஸ்வின் அவர்களுக்கு சமீபத்தில் திலிப் சர்தேசாய் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருது விழா நேற்று இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் பெங்களூரில் நடத்தப்பட்டது.


 


இந்த விழாவில் விருதை பெற்றுக்கொண்ட அஸ்வின் 'தனது வெற்றிக்கு காரணம் தான் காவிரி தண்ணீர் குடித்து வளர்ந்ததால் தான் என்றும் காவிரி பிரச்சனையை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்

கடந்த சில நாட்களாகவே அஸ்வின் தனது டுவிட்டரில் கிரிக்கெட் மட்டுமின்றி சமூக பிரச்சனைகள் குறித்தும் கருத்து தெரிவித்தார். ஜல்லிக்கட்டு, அதிமுக பிரச்சனைகள் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் பெரும் வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் அஸ்வின் காவிரி பிரச்சனை குறித்தும் தற்போது பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விழாவில் இந்திய கேப்டன் கேப்டன் கேப்டன் விராட் கோலிக்கு பாலி உம்ரேக்கர் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.