வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2022 (12:21 IST)

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி! – தங்கம் வென்ற இந்திய வீரர்!

Riffle Championship
தென்கொரியாவில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் பபுடா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென்கொரியாவில் சாங்வான் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் 261.1 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த இந்திய வீரர் அர்ஜூன் பபுடா இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இறுதி போட்டியில் அமெரிக்க வீரரான லூகாஸ் கொசென்ஸ்கியை எதிர்கொண்ட அர்ஜூன் பபுடா 17-9 என்ற புள்ளிக் கணக்கில் அவரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.

சர்வதேச உலக கோப்பை போட்டியில் அர்ஜூன் பபுடா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும், அர்ஜூன் பபுடாவுக்கு அரசியல் தலைவர்களும், நாட்டு மக்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.