1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Updated : வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (10:51 IST)

லார்ட்ஸ் தோல்வியின் புறச்சத்தங்களை ஒதுக்கி வைத்தோம்… ஆண்டர்சன் கருத்து!

இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நேற்று சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை சாய்த்தார்.

லார்ட்ஸ் டெஸ்ட் தோல்விக்குப் பின் நேற்று லீட்ஸ் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி மீண்டுள்ளது. தொடக்க நாளில் இந்தியாவை 78 ரன்களில் ஆட்டமிழக்க செய்துள்ளது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலையச் செய்தார்.

ஆட்டமுடிவில் பேசிய அவர் ‘புற சத்தங்களை ஒதுக்கிவிட்டு நாங்கள் எதில் சிறந்தவர்களோ அதில் கவனம் செலுத்த வேண்டும் என முடிவு செய்தோம். லார்ட்ஸ் டெஸ்ட்டில் முதல் 3-4 நாட்கள் நாங்கள் பிரில்லியண்ட் ஆக ஆடினோம். அதன் பின்னர்தான் ஆட்டம் மாறியது. கோலியை வீழ்த்தியது சிறப்பான தருணம். சில ஆண்டுகளாக இருவரும் ஒருவரை ஒருவர் சிறப்பாக எதிர்கொண்டு வருகிறோம். 5 போட்டிகள் கொண்ட தொடரில் அவர் விளையாட ஆரம்பித்தால் அது மிகவும் மோசமாக அமையும். அவரை கொஞ்சம் அடக்கி வைக்கவேண்டுமென நினைத்தோம்’ எனக் கூறியுள்ளார்.