ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 2 அக்டோபர் 2021 (10:09 IST)

தோனி பின்வரிசையில் இறங்குவதால் எந்த நன்மையும் இல்லை… முன்னாள் வீரர் கருத்து!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 66 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

சென்னை அணி இந்த சீசனில் வரிசையாக போட்டிகளில் வெற்றி பெற்று முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. இந்தவெற்றிகளால் தோனியின் மோசமான பேட்டிங் பார்ம் பற்றி பெரிதாய் விமர்சனங்கள் எழவில்லை. இந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடி இதுவரை 66 ரன்கள் மட்டுமே அவர் சேர்த்துள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ‘தோனி பின் வரிசையில் பேட்டிங் இறங்குவதில் எந்த நன்மையும் இல்லை. அவரின் கேப்டன்சி மற்றும் விக்கெட் கீப்பிங் சிறப்பாக உள்ளது. சென்னை அணி 10 வீரர்களுடனும் ஒரு கேப்டனும் விளையாடுவது போல உள்ளது’ என விமர்சனம் செய்துள்ளார்.