வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: வியாழன், 3 நவம்பர் 2016 (10:14 IST)

தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்ஸி

இந்த வாரம் தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்ஸி என்ன என்று கேட்டால் பச்சிளம் குழந்தையும் பதிலளிக்கும். ஆம், உலக நாயகரும், அவரது சக தர்மினியும் பிரிந்ததுதான் கோடம்பாக்கத்தில் பெரும் பேச்சாக உள்ளது.

 
13 வருட பந்தம் என்பது சுலபமானது அல்ல. உலக நாயகரின் பிற இரு துணைகளைப் போல் சமஉரிமை கொடி பிடிப்பவரல்ல தற்போது பிரிந்து சென்றிருக்கும் நடிகை. அன்பானவர், உலக நாயகனுக்கு அடங்கிப் போகிறவர். முக்கியமாக ரசிகை ஸ்தானத்தில் இருந்து உலக நாயகனை வியந்து பார்க்கிறவர். அவர்களுக்குள் பிரிவு எனும் போது.... அதையும் நடிகையே பிரிவை தேர்வு செய்யும் போது கிசுகிசுக்கள் கிளம்புவது இயற்கை.
 
நடிகைக்கும், உலக நாயகனின் மூத்த மகளுக்கும் ஒத்துப் போகவில்லை. உலக நாயகன் அடிபட்டு மருத்துவமனையில் இருந்த போது நடிகைக்கும், மூத்த மகளுக்கும் நடுவே கடும் சண்டை ஏற்பட்டது. அதில் உலக நாயகன் மகளின் தரப்புக்கு ஆதரவு தெரிவித்ததால்தான் நடிகை இந்த முடிவை எடுத்தார் என்கிறார்கள் சிலர். ஆனால் அது உண்மையா? 
 
உலக நாயகனின் இரண்டு மகள்களையும் என்னுடைய மகள்களாகவே நினைத்தேன், எப்போதும் ஆதரவு அளித்து வந்தேன். அவர்களுக்கும் எனக்கும்  எந்தப் பிரச்சனையும் இல்லை என்று நடிகையே ஒரு பேட்டியில் தெளிவுப்படுத்தியுள்ளார். எனவே அது தவறு.
 
உலக நாயகன் தனது முந்தைய சகதர்மிணிணை பிரிய, அவள் வருவாளா நடிகையுடன் அவர் ஏற்படுத்திக் கொண்ட பந்தமே காரணம். அதேபோல் தனது விஸ்வரூப படத்தில் அறிமுகப்படுத்திய அமெரிக்கவாழ் நடிகையுடன் அவருக்கு ஏற்பட்ட நெருக்கம்தான் பிரிவுக்கு காரணம் என்றொரு வதந்தியும் உலவுகிறது. 
 
உலக நாயகனின் இரண்டொரு படங்களில் அந்த நடிகை நடித்தாலும், இப்போது அவருக்கும் உலக நாயகனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று உலக நாயகனுக்கு நெருக்கமானவர்களே அதனை மறுக்கின்றனர். இந்த நேரத்தில் சில விஷமிகள் பாபத்தை நாசம் செய்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த பேரிளம் நடிகையுடன் உலக நாயகனை சம்பந்தப்படுத்தி வதந்தி கிளப்பியுள்ளனர். 
 
துபாயில் கணவன் இரு மகள்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் அந்த நடிகைக்கே இந்த வதந்தி பேரதிர்ச்சியாக இருக்கும். 
 
நடந்தது ஒரு பிரிவு... அதற்கு விளக்க உரைகளோ ஓராயிரம். சம்பந்தப்பட்டவர்களே உண்மையை சொன்னால் தவிர இந்த வதந்திகள் ஓயப்போவதில்லை.