நவராத்திரி பூஜையின்போது சொல்லவேண்டிய ஸ்லோகங்கள்!!

Written By Sasikala
Updated: திங்கள், 30 செப்டம்பர் 2019 (12:35 IST)
 
நவராத்திரி அன்று சக்தியை வணங்கினால் எல்லா வரங்களும் கிட்டும் லட்சுமி கடாட்சம் கிட்டும் என நம்பிக்கை. 9 நாட்களும் நம்பிக்கையோடு வணங்கினால் வாழ்வில் வெற்றி நிச்சயம். அம்பிகையை வணங்கும்போது தினமும் ஒரு ஸ்லோகம் சொல்லி வணங்கினால்  சிறப்பு.
 
ஸ்லோகம்:
 
கிராஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!
துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா 
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!
 
இதனுடைய பொருள், இறைவனோடு கலந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை தெரிந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவள் நீ எல்லையற்ற  மகிமை கொண்டவள் நீ, மகாமாயாவாக இருந்து உலகை இயக்கச் செய்து பிரமிக்க வைப்பவளே! அருள்புரிவாயாக என்பதாகும்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments