வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By ஆனந்த குமார்

கரூர்: விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் மஹா சங்கடஹர சதூர்த்தி நிகழ்ச்சி

கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் மஹா சங்கடஹர சதூர்த்தி நிகழ்ச்சி – பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு கரூர் நகரில் மையப்பகுதியில் தேரடி வீதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில், மஹா சங்கடஹரசதூர்த்தி, நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 
மூலவர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகங்களும், பின்னர் மஹா தீபாராதனையும், தங்க கவசம்  கொண்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரங்கள் நடத்தப்பட்டது. கோபுர ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, மஹா தீபாராதனை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது.

சங்கடங்களை போக்கும், மஹா சங்கடஹர சதூர்த்தி நிகழ்ச்சியில் விநாயகரை வழிபட்டால் கோடி புண்ணியம் என்பது ஐதீகம் என்பதினால் பக்தர்கள் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விநாயகர் அருள் பெற்றனர்.