வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By ஆனந்த குமார்

கரூர்: அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் தங்கத்தேர் இழுத்த பக்தர்கள்!!

கரூர் நகரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி தங்கத்தேரினை இழுத்த பக்தர்கள்.
தமிழகத்தில் உள்ள மாரியம்மன் ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, தங்கத்தேரோட்டம் இழுக்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 
 
கரூர் மாரியம்மன் ஆலயத்தினை சுற்றி பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர், பல்வேறு வண்ண விளக்குகளினால் ஒளிரும் மின்னோட்டத்தில் பக்தர்களுக்கு மாரியம்மன் அருள் பாலித்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.