தொடர்புடைய செய்திகள்
- மதியம் 2 மணியில் இருந்தே இரவு ஊரடங்கு… அறிவித்த மாநகராட்சி!
- ராம பக்தர் அனுமன் பிறந்த இடம் இதுதான் ...திருப்பதி தேவஸ்தான் தகவல்
- திருமலையே ஆஞ்சநேயர் பிறப்பிடம்... திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
- திருப்பதியில் கொரோனா வார்டாக மாறும் பக்தர்கள் தங்கும் விடுதிகள்!
- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்.30 வரை மட்டுமே அனுமதி என அறிவிப்பு!
திருப்பதியில் உள்ள ஏழு மலைகள் என்ன தெரியுமா...?
திருவேங்கடவன் கோவில் கொண்டுள்ள சப்தகிரி எனப்படும் ஏழுமலைகளின் பெயர்கள் கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி ஆகியவையாகும்.
1. வேங்கட மலை: வேம் என்றால் பாவம், கட என்றால் நாசமடைதல். பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு
வேங்கட மலை என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.
2. சேஷ மலை: பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் சேஷமலை என்று அழைக்கப்படுகிறது.
3. வேதமலை: வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது வேத மலை எனப்பட்டது.
4. கருட மலை: இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது கருட மலை எனப் பெயர் பெற்றது.
5. விருஷப மலை: விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது விருஷப மலை எனப் பெயர் பெற்றது.
6. அஞ்சன மலை: ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை அஞ்சன மலை எனப்படுகிறது.
7. ஆனந்த மலை: ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது ஆனந்த மலை என்று பெயர் பெற்றது.
