வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சிவபெருமானை எந்த பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்வதால் என்ன பலன்கள்...?

சிவபெருமானை அடைவதற்கு சரணாகதி ஒன்றே வழியாகும். அவரை சரண் அடைபவர்கள் வாழ்வில் எல்லா நலன்களும், வளங்களும் வெற்றி இன்புற்றிருப்பர். சிவபெருமானை வழிபடுவதற்கு நிறைய சாஸ்திரங்கள் இருக்கின்றன. 

சிவாலயங்களில் வழிபடுவதற்கான முறைகளும் ஏராளமாக இருக்கின்றன. சிவன் நினைத்தால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். ஒருவரை ஒன்றும் இல்லாதவராக ஆக்கவும் முடியும். செல்வந்தராக மாற்றவும் முடியும்.
 
* சிவனை தூய நல்லெண்ணெயில் வாசனை திரவியங்கள் கலந்து அபிஷேகம் செய்தால், நோயற்ற வாழ்வு கிடைக்கும்.
 
சுத்தமான பசுவின் கறந்த பாலில் அபிஷேகம் செய்தால், தீர்க்க ஆயுள் கிடைக்கும்.
 
சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால், குயிலினும் இனிய குரல் கிடைக்கும்.
 
சர்க்கரையினால் அபிஷேகம் செய்தால், மனநிறைவு உண்டாகும்.
 
இளநீர் அபிஷேகம் செய்தால், பேரானந்தம் கிட்டும்.
 
பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
 
தயிர் அபிஷேகம் செய்தால், சம்பத்து கிடைக்கும்.
 
கரும்புச்சாறு அபிஷேகம் செய்தால், உடல் வலிமை பெறும்.
 
மஞ்சள் அபிஷேகம் செய்தால், அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்.
 
ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைக்க வேண்டும்.