தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்று 639 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: சென்னையில் எத்தனை பேர்?
- பள்ளி, கல்லூரி கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தளங்கள் செயல்பட தடை நீடிப்பு
- வஞ்சக வலையில் வீழ்த்தி கொல்லப்பட்ட தொப்புள்கொடி உறவுகளுக்கு எமது வீர வணக்கங்கள். – ராமதாஸ் டுவீட்
- ஹீரோக்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வர தயக்கம் ?
- நீளும் ஊரடங்கு... நான்காம் கட்டம் எப்படி இருக்கும்??
சனிக்கிழமை அளவுக்கு இல்லாவிட்டாலும் சூடுபிடித்த விற்பனை: டாஸ்மாக் வசூல் நிலவரம்!
நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக விற்பனை சூடுபிடித்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் இடையே திறக்க அரசு முன் வந்தபோது உயர்நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டது. இதுகுறித்த மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றம் கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து நேற்று முன் தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
நீண்ட நாட்கள் கழித்து மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் உற்சாகத்துடன் குவிந்த மதுப்பிரியர்கள் பல மணி நேரம் வரிசையில் நின்று மதுவை வாங்கி சென்றனர். நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் விற்பனை அதிகமாக இருக்கும் என கணக்கிடப்பட்டது. தொடக்க நாளான சனிக்கிழமை அன்று மட்டும் 163 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியிருந்த நிலையில், நேற்று 133 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. தொடக்க நாளை விட 30 கோடி ரூபாய் குறைவாக விற்பனையாகியுள்ளது.
