1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (21:08 IST)

பெண்ணிடம் நகைகள் பறிப்பு...போலி சாமியார் கைது!

மாங்கல்ய தோஷம் கழிப்பதாகக் கூறி நகைகளைப் பறித்த போலி சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வசித்து வருபவர் கிரிஜா. இவருக்கு சுஜிஜா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சுஜிதா தன்னை ஒரு சாமியார் எனக் கூறியதால், கிரிஜாவின் 2 மகள்களுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும் அதனால் திருமணமாவதில் தடை ஏற்படலாம் எனக் கூறியுள்ளார். இதை நம்பிய கிரிஜா, சுஜிதாவின் கூற்றுப்படி பரிகார பூகைக்காக  நகைகளைக் கொடுத்துள்ளார். இதையடுத்து ஏமாற்றிப் பணம் பறித்த சுஜிதாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.