1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (17:56 IST)

ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் கார்டு உயிரிழப்பு: பச்சைக்கொடி காட்டியபோது விபரீதம்!

railway guard
ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் கார்டு உயிரிழப்பு: பச்சைக்கொடி காட்டியபோது விபரீதம்!
ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குடியாத்தம் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 கேரளாவைச் சேர்ந்த மினிமோல் என்ற 36 வயது பெண் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் கார்டு ஆக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பச்சைக்கொடி காட்டும் கார்டு பணியில் இருந்தபோது பச்சைக்கொடி காட்டிய போது திடீரென தவறி விழுந்தார்
 
இதனை கவனிக்காத ரயில்வே ஓட்டுனர் ரயிலை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். அடுத்த ரயில் நிலையத்தில் பச்சைக்கொடி காட்ட ஆள் இல்லாததை அறிந்த ஓட்டுநர் இதுகுறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார் 
 
இந்த நிலையில் குடியாத்தம் அருகே உள்ள ரயில் நிலையம் ஒன்றில் மினிமோல் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்